paramathas - Poems New

Home
Flams
Elam Poems
Poems New
Poems
Poems-
Poems--
Poems---
Poems---------
Poems----
Poems--------
poems------
poems-------------
கருத்து
தொடர்புக்கு
ஒலிவடிவில்.....
காதலர்கள் நகைச்சுவை
photos poems
interview



 



வானத்தின் நீலாவே
உன் வருகைக்காய்
ஆண்டு பல கடந்து வந்தேன்

*
நீ காலம் கடந்து வந்தாலும்
என்னைக்காதல் செய்கிறாயே
இது போதும்

*
உன் சுவாசக்காற்றை
நான் சுவாசித்து
வாழ்ந்திடுவேன்

*
என் நிலாவே
கடலில் மிதப்பதெல்லாம்
கனமற்றதல்லா
என் கண்களில் உன்
சிலைகளன்றி வேறில்லை

*
என் மனதினில்
உன்னைப் பற்றிய கற்பனைகள்
எல்லையில்லையடி
என்னை நீ பிரிந்தால் நான்
சில நிமிடத்தில் பிரதமாகிடுவேன்.


அடிமையாக வாழ இல்லை23.dec.2007

உன்னைப்பார்த்த முதல் நிமிடம் அதுவே நான் பிறந்த முதல் நிமிடம் உன்னை சந்திக்க நினைத்த நிமிடங்கள்  அதுவே நான் உன்னோடு வாழ நினைத்த நிமிடங்கள் நிலவின் அருகில் தோன்றும் நட்சத்திரம் நிலாவுடன் சேருமா நீரற்ற செடி உயிரோடு வழுமா நேசம் அற்ற பெண்ணே நேசம் கொண்டு என்ன பயன்
பெண்களே நீங்கள் வாழ்க்கையை வாங்குகிறீர்களா?
இல்லை விற்கிறீர்களா?
ஆண்களே நீங்கள் வாழ்க்கையை கொடுக்கிறீர்களா?
இல்லை எடுக்கிறீர்களா?
ஆண்களே பெண் வீட்டில் சீர்தனம் கொடுப்பது மகள் சீரும் சிறப்புடனும் வாழ ஆண் வீட்டுனர் பெண்களே சீர்தனம் வாங்குவது உங்களுக்கு அடிமையாக வாழ இல்லை


மரணம் ஒன்று பிரித்தாலும்23.dec.2007 

என்னை காதல் செய்தவலே 
ஏனடி என்னை அந்தரத்தில் தவிக்க வைக்கிறாய் 
உன் வருகைகள் ஒவ்வொன்றுக்கும் 
வரந்து கொடுத்த கவிதையடி  என் காதல் கடிதங்கள்
நீ வாசித்து முடித்ததும் கசக்கி எறிய 
அது கடிதம் இல்லை அது எனது இதயமடி 
அது எனது வாழ்வை உன்னோடு தான்  
என்பதை கூறுமடி 
நீ  உன் வாயிலிருந்து சொன்ன வார்த்தை 
என்னை மறந்து விடு என்று 
நான் அப்போதே சொன்னேன் 
நாம் மரணம் ஒன்று பிரித்தாலும் 
என் மனசு மட்டும் உன்னைத்தான் காதல் செய்யுமடி 
நான் அன்று சொன்ன வார்த்தை 
இன்றும் உன் கவிதைகளில் பார்க்கின்றேன் 
உன் வாய் தான் என்னை மறைக்கச் சொன்னது 
உனது இதயம் என் பெயரை உச்சரிக்கிறதை 
என்னால் உணர முடியுதடி

::::பாரிஸ்::::பா.அ.தாஸ்:::::
 
றோஜாக்கூட்டங்களே


என்னைச் சுற்றிப் பறக்கும் தேனீக்களே
என் இசையின்றித் தூங்க மறக்கும் றோஜாக்கூட்டங்களே
என்னில் என்னவுண்டு
என்னைக்கனவில் காண்பவளே யாரடி நீ?
உன்னைப்பற்றி காலையில் யோசித்தால்
மாலை வந்துவிடும்
என் காதலை கவிதையில் சொன்னால்
என் ஆயுள் முடிந்துவிடும்
என் காதல் தேவதைக்கு
அங்கு என்ன ஆச்சு
நான் அனுப்பிய தூதுப்புறா என்னும் வரவில்லையே
என் கவிதைகளை நேசம் கொண்டவள் நீயடி
என் இருதயத்தை இரங்க வைத்தவள் நீயடி
என் அசைவுகள் ஒவ்வொன்றுக்கும்
உன் கவிவரிகள் இம்சையில்லையடி
என் மனதில் பறக்கும் காதல்க் கொடி நீயடி
என் காதல்க்கொடியை
உன் வருகைக்காய் ஏற்றி வைத்துள்ளேன் 
என் கொடி எங்கு தெரிகிறதோ
அங்கு நானிருப்பேன்
என்னை நாடிவா
என்றும் உன் வருகைக்காய் காத்திருக்கும்......
::::பாரிஸ்::::பா.அ.தாஸ்::::: 

சுழர மறுத்தாள்



இவ்வுலகம்
சுழர மறுத்தாள்
குயில்கள் இசைக்க
மறுத்தது
***********
நான் நேசம்
கொண்ட
பெண்னே நீ பிரிந்து
சென்றதால்
எனது இருதயம்
சுக்குனூராய்ப் போனதடி
********************
பூவே நான் கவி
படைப்பது உன்னால்
நீ கண்ணீர்
வடிப்பது என்னால்
உயர்ந்தவர் வாழ்வில்
உலகம் சிறிது 
**************
உணர்ந்தவர் வாழ்வில்
நாம் உண்மை
அதை உறுதி செய்வோம்
உயிருள்ளவரை

::::பாரிஸ்::::பா.அ.தாஸ்::::: 

பெண்கள் அழகு படுத்துவது 
தங்களை ஆண்கள் கவரவேணும் என்பதற்காக
ஆண்களே கவனமாகக் கேழுங்கள்
அழகாக இருக்கிறாள் என்பதற்காக
அவள் பின் சென்று விடாதீர்கள்
அவளின் வெளி அழகைப்பார்து மயங்காதே
அவளிடம் நீங்கள் மயங்க வேண்டுமென்றால்
அவளின் மனதைப்பார்த்து மயங்கு
பெண்கள் அழகென்பது பொய்வேடம்................
::::பாரிஸ்::::பா.அ.தாஸ்::::: 
.

என்னைத் தேடிவா
*****************************

காதலனே
நான் நடந்து செல்லும் பாதையில்
முட்கள் இருக்கிறது எனத்தெரிந்தவுடன்
என் கால்களில் முட்கள் குத்திவிடுமோ என்று
நான் செல்லும் பாதையில்
முட்களிற்குப் பதிலாக பூக்களைப் பொழிந்தாயே
என்னுடைய விரலில் கத்தி வெட்டியவுடன்
அதிலிருந்து வந்த இரத்தத்தைக் குடித்தாயே
நான் உன்னை விட்டுப்பிரிகின்றேன் என்றவுடன்
என்னுடைய கண்களில் வந்த நீரை
உன் வாயினால் உறிஞ்சி எடுத்தாயே
எனக்குத் தலைவலி என்றால்
உன்னுடைய கண்களெல்லாம் கலங்கி விடுமே
இனியவனே நீ எங்கு இருக்கின்றாய்
இப்பொழுது எனக்கு உடல் நலம் சரியில்லை
என் முன்னே வந்திடு ..............
::::பாரிஸ்::::பா.அ.தாஸ்:::::
 


இந்து சமுத்திரம்போல்


அன்புத்தோழி இந்து
இந்து சமுத்திரம்போல்
எப்போதும் என்னை சூழ்ந்திருப்பாயே
ஒரு நிமிடம் கூட
என்னை விட்டுப் பிரியமாட்டாயே
நாமிருவரும் படித்த பாடசாலையை
நான்  இன்றும் மறக்கவில்லை
எனக்காக நீ அடிவாங்கியதை
நான் மறக்கவிலை
நீ வாங்கித்தந்த பேனாவை
நான் மறக்கவில்லை
உன்னுடன் சேர்ந்து
மழையில் நனைந்ததை
நான் மறக்கவில்லை
எனக்கு ஆறுதல் சொல்வதும் நீ தானே
எனக்கு அன்பைச் சொல்லித்தந்ததும் நீதானே
நான் பாடசாலைக்கு ஓர் நாள் வரவில்லையென்றால்
என்னைத்தேடி வருவாயே
இப்போது நான் உன்னை விட்டு
வெகுதூரம் பிரிந்திருக்கின்றேன்
என் அழுகைச் சத்தம்
உன் காதில் விழவில்லையா
புல்லாங்குழலானதை மூங்கில் எப்படி மறக்க முடியாதோ
அதே போல் உன்னால் ஆன நட்பை நான் மறக்கமாட்டேன்..........
::::பாரிஸ்::::பா.அ.தாஸ்::::: 

கண்ணீரின் வலி(06.12.2007)

உன்னுடைய கைகளால் என்னைக்கட்டி அணைத்து 

இதுதான் நம்முடைய கடைசிச்சந்திப்பு என்று 

விளையாட்டிற்குச் சொன்னதிற்கு உன்னுடைய உதடுகளில் தெரிந்தது 

பிரிவு எப்படிப்பட்டது என்று இனி எப்போ சந்திப்போம்
 
என்று கேட்டபோது உன்னுடைய கண்களில் இருந்து வரும் நீர்
 
புரிய வைத்தது இது கண்ணீர் அல்ல 

பிரிவின் வலி என்று உன்னுடைய கண்கள் சொல்கின்றன.......
::::பாரிஸ்::::பா.அ.தாஸ்::::: 
..

நிலவை இரசித்ததில்லை(06.12.2007)

நான் சிறுவயதில் நிலவை இரசித்திருக்கிறேன் 

அதன் பின்  நிலவைப் பார்த்திருக்கின்றேன் 

ஆனால் இரசித்ததில்லை உன்னை எப்போது
 
முதல் முறையாக கண்டேனோ அன்றிலிருந்து நிலவைப்பார்த்து 

இரசிக்கின்றேன் ஏன் தெரியுமா 

நீ என்னைப்பார்த்து இரசித்ததை 

நான் நிலவில் உன் முகத்தைக் காண்கின்றேன்.....
::::பாரிஸ்::::பா.அ.தாஸ்::::: 
.. 


காதலின் வலி

முதலாவது காதல்
அக்காதல் வெற்றி பெற்றாலும்
தோல்வியடைந்தாலும்
அதன் சந்தோசமும்
அதன் வலியும் என்றும் மாறாது
இன்னொருதடவை காதல் வந்தாலும்
முதல்க்காதலின் வலி
மனதை விட்டுச் செல்லாது
முதல்க் காதல் எப்படி இருக்கும் தெரியுமா?
அப்பொழுது தான்
ஒருதரை ஒருதர் தெரிந்து கொள்வார்கள்
காதலின் அர்த்தம்
என்னவென்று புரிந்து கொள்வார்கள்
காதல் வற்புறுத்தி வருவதல்ல
ஒருதரின் விருப்பம்
காதல் யார் மனதிலும் வரும்
பணக்காறனிற்கு மட்டும் தான்
காதல் வருவதல்ல
ஏளையாக இருந்தாலும்
அவன் மனதிலும் காதல் வரும்
மனிதர்களில் இரசிக்கும் தன்மை வேறு
சுவைக்கும் தன்மை வேறு
ஆனால் காதலில் மட்டும்
எல்லோருக்கும் ஒரே தன்மை இது தான் காதல்............
 
::::பாரிஸ்::::பா.அ.தாஸ்::::: 

 நண்பனை நம்பு

என்னுடைய நண்பன்
எனக்கு பல வருடங்களாகப் பளக்கம்
நீ எனக்கு சில மாதங்களாகத்தான் பளக்கம்
நீ என்னை காதலிக்கவில்லை
என்று சொன்னான் அவன் சொன்னான்
ஆனால் நான் அதை நம்பவில்லை
அவனை விட நான் உன்மீது வைத்திருக்கும்
நம்பிக்கை அதிகம்
நான் உன்னிடம் வந்து கேட்ட போது தான்
புரிந்து கொண்டேன்
நீ என்னை காதலிக்கவில்லையென்று
அப்போது தான் எனக்குப் புரிந்தது
காதலியை நம்பாட்டாலும்
நண்பனை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று............
::::பாரிஸ்::::பா.அ.தாஸ்::::: 
....

 

கண்கள் விழித்திருக்கின்றதா

இன்று
என்னுடன் நீ பேசிவிட்டுச் சென்று விட்டாய்
இப்போது கூட
உன்னுடைய கண்கள் விழித்திருக்கமாட்டாது
என்னுடைய கண்கள் என்னும் உறங்கவில்லை
நீ பேசிய வார்த்தைகள்
ஒவ்வொன்றையும் பொருட்படுத்தி
என் மனதிற்குள் சேகரித்து வைக்கின்றேன்
ஏன் தெரியுமா?
நீ என்னை விட்டுப் பிரிந்தாலும்
நீ பேசிய வார்த்தைகளை
மறுபடியும் கேட்கும்போது
உன்னுடைய குரலை அப்பொழுதாவது கேட்பேனல்லவா.............
::::பாரிஸ்::::பா.அ.தாஸ்::::: 

Aujourd'hui sont déjà 26485 visitors (63000 hits) Ici!
Ce site web a été créé gratuitement avec Ma-page.fr. Tu veux aussi ton propre site web ?
S'inscrire gratuitement