இவ்வுலகம்
சுழர மறுத்தாள்
குயில்கள் இசைக்க
மறுத்தது
***********
நான் நேசம்
கொண்ட
பெண்னே நீ பிரிந்து
சென்றதால்
எனது இருதயம்
சுக்குனூராய்ப் போனதடி
********************
பூவே நான் கவி
படைப்பது உன்னால்
நீ கண்ணீர்
வடிப்பது என்னால்
உயர்ந்தவர் வாழ்வில்
உலகம் சிறிது
**************
உணர்ந்தவர் வாழ்வில்
நாம் உண்மை
அதை உறுதி செய்வோம்
உயிருள்ளவரை
::::பாரிஸ்::::பா.அ.தாஸ்:::::
பெண்கள் அழகு படுத்துவது
தங்களை ஆண்கள் கவரவேணும் என்பதற்காக
ஆண்களே கவனமாகக் கேழுங்கள்
அழகாக இருக்கிறாள் என்பதற்காக
அவள் பின் சென்று விடாதீர்கள்
அவளின் வெளி அழகைப்பார்து மயங்காதே
அவளிடம் நீங்கள் மயங்க வேண்டுமென்றால்
அவளின் மனதைப்பார்த்து மயங்கு
பெண்கள் அழகென்பது பொய்வேடம்................
::::பாரிஸ்::::பா.அ.தாஸ்:::::
.
என்னைத் தேடிவா
*****************************
காதலனே
நான் நடந்து செல்லும் பாதையில்
முட்கள் இருக்கிறது எனத்தெரிந்தவுடன்
என் கால்களில் முட்கள் குத்திவிடுமோ என்று
நான் செல்லும் பாதையில்
முட்களிற்குப் பதிலாக பூக்களைப் பொழிந்தாயே
என்னுடைய விரலில் கத்தி வெட்டியவுடன்
அதிலிருந்து வந்த இரத்தத்தைக் குடித்தாயே
நான் உன்னை விட்டுப்பிரிகின்றேன் என்றவுடன்
என்னுடைய கண்களில் வந்த நீரை
உன் வாயினால் உறிஞ்சி எடுத்தாயே
எனக்குத் தலைவலி என்றால்
உன்னுடைய கண்களெல்லாம் கலங்கி விடுமே
இனியவனே நீ எங்கு இருக்கின்றாய்
இப்பொழுது எனக்கு உடல் நலம் சரியில்லை
என் முன்னே வந்திடு ..............
::::பாரிஸ்::::பா.அ.தாஸ்:::::
இந்து சமுத்திரம்போல்
அன்புத்தோழி இந்து
இந்து சமுத்திரம்போல்
எப்போதும் என்னை சூழ்ந்திருப்பாயே
ஒரு நிமிடம் கூட
என்னை விட்டுப் பிரியமாட்டாயே
நாமிருவரும் படித்த பாடசாலையை
நான் இன்றும் மறக்கவில்லை
எனக்காக நீ அடிவாங்கியதை
நான் மறக்கவிலை
நீ வாங்கித்தந்த பேனாவை
நான் மறக்கவில்லை
உன்னுடன் சேர்ந்து
மழையில் நனைந்ததை
நான் மறக்கவில்லை
எனக்கு ஆறுதல் சொல்வதும் நீ தானே
எனக்கு அன்பைச் சொல்லித்தந்ததும் நீதானே
நான் பாடசாலைக்கு ஓர் நாள் வரவில்லையென்றால்
என்னைத்தேடி வருவாயே
இப்போது நான் உன்னை விட்டு
வெகுதூரம் பிரிந்திருக்கின்றேன்
என் அழுகைச் சத்தம்
உன் காதில் விழவில்லையா
புல்லாங்குழலானதை மூங்கில் எப்படி மறக்க முடியாதோ
அதே போல் உன்னால் ஆன நட்பை நான் மறக்கமாட்டேன்..........
::::பாரிஸ்::::பா.அ.தாஸ்:::::
கண்ணீரின் வலி(06.12.2007)
உன்னுடைய கைகளால் என்னைக்கட்டி அணைத்து
இதுதான் நம்முடைய கடைசிச்சந்திப்பு என்று
விளையாட்டிற்குச் சொன்னதிற்கு உன்னுடைய உதடுகளில் தெரிந்தது
பிரிவு எப்படிப்பட்டது என்று இனி எப்போ சந்திப்போம்
என்று கேட்டபோது உன்னுடைய கண்களில் இருந்து வரும் நீர்
புரிய வைத்தது இது கண்ணீர் அல்ல
பிரிவின் வலி என்று உன்னுடைய கண்கள் சொல்கின்றன.......
::::பாரிஸ்::::பா.அ.தாஸ்:::::
..
நிலவை இரசித்ததில்லை(06.12.2007)
நான் சிறுவயதில் நிலவை இரசித்திருக்கிறேன்
அதன் பின் நிலவைப் பார்த்திருக்கின்றேன்
ஆனால் இரசித்ததில்லை உன்னை எப்போது
முதல் முறையாக கண்டேனோ அன்றிலிருந்து நிலவைப்பார்த்து
இரசிக்கின்றேன் ஏன் தெரியுமா
நீ என்னைப்பார்த்து இரசித்ததை
நான் நிலவில் உன் முகத்தைக் காண்கின்றேன்.....
::::பாரிஸ்::::பா.அ.தாஸ்:::::
..
காதலின் வலி
முதலாவது காதல்
அக்காதல் வெற்றி பெற்றாலும்
தோல்வியடைந்தாலும்
அதன் சந்தோசமும்
அதன் வலியும் என்றும் மாறாது
இன்னொருதடவை காதல் வந்தாலும்
முதல்க்காதலின் வலி
மனதை விட்டுச் செல்லாது
முதல்க் காதல் எப்படி இருக்கும் தெரியுமா?
அப்பொழுது தான்
ஒருதரை ஒருதர் தெரிந்து கொள்வார்கள்
காதலின் அர்த்தம்
என்னவென்று புரிந்து கொள்வார்கள்
காதல் வற்புறுத்தி வருவதல்ல
ஒருதரின் விருப்பம்
காதல் யார் மனதிலும் வரும்
பணக்காறனிற்கு மட்டும் தான்
காதல் வருவதல்ல
ஏளையாக இருந்தாலும்
அவன் மனதிலும் காதல் வரும்
மனிதர்களில் இரசிக்கும் தன்மை வேறு
சுவைக்கும் தன்மை வேறு
ஆனால் காதலில் மட்டும்
எல்லோருக்கும் ஒரே தன்மை இது தான் காதல்............
::::பாரிஸ்::::பா.அ.தாஸ்:::::
நண்பனை நம்பு
என்னுடைய நண்பன்
எனக்கு பல வருடங்களாகப் பளக்கம்
நீ எனக்கு சில மாதங்களாகத்தான் பளக்கம்
நீ என்னை காதலிக்கவில்லை
என்று சொன்னான் அவன் சொன்னான்
ஆனால் நான் அதை நம்பவில்லை
அவனை விட நான் உன்மீது வைத்திருக்கும்
நம்பிக்கை அதிகம்
நான் உன்னிடம் வந்து கேட்ட போது தான்
புரிந்து கொண்டேன்
நீ என்னை காதலிக்கவில்லையென்று
அப்போது தான் எனக்குப் புரிந்தது
காதலியை நம்பாட்டாலும்
நண்பனை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று............
::::பாரிஸ்::::பா.அ.தாஸ்:::::
....
கண்கள் விழித்திருக்கின்றதா
இன்று
என்னுடன் நீ பேசிவிட்டுச் சென்று விட்டாய்
இப்போது கூட
உன்னுடைய கண்கள் விழித்திருக்கமாட்டாது
என்னுடைய கண்கள் என்னும் உறங்கவில்லை
நீ பேசிய வார்த்தைகள்
ஒவ்வொன்றையும் பொருட்படுத்தி
என் மனதிற்குள் சேகரித்து வைக்கின்றேன்
ஏன் தெரியுமா?
நீ என்னை விட்டுப் பிரிந்தாலும்
நீ பேசிய வார்த்தைகளை
மறுபடியும் கேட்கும்போது
உன்னுடைய குரலை அப்பொழுதாவது கேட்பேனல்லவா.............
::::பாரிஸ்::::பா.அ.தாஸ்:::::