நேசித்தேன்
இரவை நேசித்தேன் - அது
விடிந்து போனது.
பகலை நேசித்தேன் -அது
இரவாகி போனது.
மலரை நேசித்தேன் - அதுவும்
உதிர்ந்து போனது.
நிலவை நேசித்தேன் - அதுவும்
மறைந்து போனது.
உன்னை நேசித்தேன் - நீயும்
பிரிந்து போகிறாய்.!!!!
ஆண்களே காதலிக்குமுன்
ஆண்களே காதலிக்குமுன்
பெண்ணின் கண்களை பாருங்கள்
அதில் தெரியும்
சில ஆண்களின் கல்லறைகள்.!!!!!
நீ
நீ என்றால் உன் என்று அர்த்தம்
உன் வாழ்க்கை உன் கையில்
உன் முன்னேற்றம் உன் கையில்
உன் எதிர்காலம் உன் கையில்
மொத்தமாக நீ உனக்கு மட்டும்
காதல் வருமா?
காலம் காத்திருந்தால்,
என்றாவது வசந்தம் வரும்
பாலைவனம் பிரிந்தால்,
எங்காவது சோலை வரும்
கற்பனை செய்தால்,
எப்போதாவது கவிதை வரும்
நான் என்ன செய்தும்,
உன் காதல் வரவில்லையே?